Published : 24 Nov 2021 03:09 AM
Last Updated : 24 Nov 2021 03:09 AM
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சிஐடியூ ஊழியர் சம்மேளனம் சார்பில், திருநெல்வேலியில் வண்ணார்பேட்டை, கேடிசி நகர், தாமிரபரணி பணிமனைகள்முன் உண்ணாவிரதம் நடைபெற்றது.
`ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன், மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். இது தொடர்பாக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. வண்ணார்பேட்டையில் நடந்த போராட்டத்துக்கு மத்திய சங்க துணைச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். விரைவு போக்குவரத்து கழக மத்திய சங்க துணைத் தலைவர் அருண் முன்னிலை வகித்தார். விளாத்திகுளத்தில் போக்குவரத்து கழக பணிமனை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது. சிஐடியு கிளைத் தலைவர் எஸ்.குமார் தலைமை வகித்தார். சம்மேளனக் குழு உறுப்பினர் எம்.சிவக்குமார், கிளைச் செயலாளர் கே.ராமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் தாலுகா செயலாளர் கே.ஜோதி உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்து பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT