Published : 24 Nov 2021 03:10 AM
Last Updated : 24 Nov 2021 03:10 AM

‘பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்' :

திருவண்ணாமலை: சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.1 லட்சம் விருது தொகை, ஒரு பவுன் தங்க பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது. இதையொட்டி 2021-ம் ஆண்டுக்கான விருது வழங்கப்பட உள்ளது. சமூக நீதிக்காக பாடுபட்டு, மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகளை செய்துள்ளவர்கள், ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சியருக்கு வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

சுய விவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்களை உள்ளடக்கியதாக விண்ணப்பங்கள் இருக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x