Published : 23 Nov 2021 03:07 AM
Last Updated : 23 Nov 2021 03:07 AM
காங்கயம்: காங்கயம் போக்குவரத்து பணிமனை முன்பு, அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) சார்பில், போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மண்டல துணைத் தலைவர் நடராஜ் தலைமை வகித்தார். ஊதிய பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். ஓய்வூதியதாரர்களின் பணப்பலன்கள், அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும். வார ஓய்வு பறிப்பை கைவிடவேண்டும் என்பன உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT