Published : 23 Nov 2021 03:07 AM
Last Updated : 23 Nov 2021 03:07 AM

காங்கயத்தில் மரக்கன்றுகள் நடும் விழா :

காங்கயம்: வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தில், பசுமை போர்வை இயக்கம் சார்பாக காங்கயம் வட்டம் பொத்தியபாளையம் கிராமத்தில் விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் வேளாண்மை இணை இயக்குநர் மனோகரன் பேசும்போது, ‘‘காங்கயம் வட்டாரத்தில் தேக்கு, வேம்பு, மலைவேம்பு, பெருநெல்லி என மொத்தம் 18,400 மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. இதில் வரப்பு நடவுமுறை செய்ய ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளும், ஓர் ஏக்கர் மொத்த நிலத்தில் நடவு செய்ய 160 மரக்கன்றுகளும் வழங்கப்படுகின்றன.

இவற்றை பராமரிக்க ஒரு மரத்துக்கு முதல் ஆண்டு ரூ.14-ம், இரண்டு முதல் நான்காவது ஆண்டு வரை ரூ.7 என மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள், உழவன் செயலியில் பதிவு செய்து, அந்த ரசீதை வைத்து மருத்துவ குணங்கள் கொண்ட மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம்,’’ என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மகாதேவன், காங்கயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ரவி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x