Published : 23 Nov 2021 03:08 AM
Last Updated : 23 Nov 2021 03:08 AM

கூடாரம் அமைத்து சுற்றுலா பயணிகளை தங்க வைத்தால் கடும் நடவடிக்கை :

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ஆபத்தான முறையில் மலை உச்சிகளின் மீதும், அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியும் கூடாரம் அமைத்து தங்குவதாக வருவாய்த் துறையினருக்கு புகார் வந்துள்ளது.

இதுகுறித்து கொடைக்கானல் கோட்டாட்சியர் முருகேசன் கூறியதாவது: கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தற்காலிக கூடாரங்கள் அமைக்க அனுமதி இல்லாத நிலையில், சுற்றுலாப் பயணிகள் இது தெரியாமல் தங்கி வருகின்றனர். கொடைக்கானல் மலைப் பகுதியில் அமைத்துள்ள கூடாரங்களை ஒழிக்க போலீஸார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உரிய அனுமதியின்றி தங்கும் விடுதிகளாகச் செயல்பட்ட காட்டேஜ்கள் மீது ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x