Published : 23 Nov 2021 03:09 AM
Last Updated : 23 Nov 2021 03:09 AM

மின்னல் தாக்கி விவசாயி, சுவர் இடிந்து பெண் உயிரிழப்பு :

அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த கள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் சாமிநாதன்(47). விவசாயியான இவர் நேற்று வயல் பகுதியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதில், மின்னல் தாக்கியதில் சாமிநாதன் படுகாயமடைந்தார். அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு, திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சாமிநாதன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சுவர் இடிந்து... அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலத்தை அடுத்த உல்லியக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் காமராசு மனைவி கண்மணி(45). இவர், நேற்று காலை 9 மாத குழந்தையான தனது பேரன் கமலேஷை தூக்கிக்கொண்டு, ஆட்டுக் கொட்டகைக்கு சென்றார். அப்போது, கொட்டகையின் அருகேயுள்ள சுப்பிரமணியன் என்பவரின் உபயோகமற்ற வீட்டின் மண் சுவர் இடிந்து, கண்மணி மீது விழுந்தது. இதில், இடிபாடுகளில் சிக்கி கண்மணி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கமலேஷுக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x