Published : 23 Nov 2021 03:09 AM
Last Updated : 23 Nov 2021 03:09 AM

ஆம்பூர் அருகே பொக்லைன் கவிழ்ந்து விபத்து :

ஆம்பூர்: ஆம்பூர் அருகே தரைப்பாலம் வழியாக தண்ணீரில் மிதந்து வந்த சகதிகளை பொக்லைன் கொண்டு அகற்றும் பணி நடைபெற்றபோது, எதிர்பாராதவிதமாக பொக்லைன் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுநர் அதிர்ஷ்டவமாக உயிர் தப்பினார்.

தமிழக - ஆந்திர எல்லைப்பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், பாலாற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த பத்தலபல்லி மலைப்பகுதியிலிருந்து வரும் மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு ஊராட்சி மற்றும் ராமச்சந்திராபுரம் தரைப்பாலம் முழுமையாக நீரில் மூழ்கியது.

இதனால், அங்கு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் மழைப்பொழிவு படிப்படியாக குறைந்துள்ளதால் வெள்ள நீர் குறைந்தது. இதையடுத்து, நீரில் மூழ்கிய தரைப்பாலம் சீர் செய்யும் பணிகள் நேற்று காலை தொடங்கின. மலட்டாற்றில் இருந்து அடித்து வரப்பட்ட செடிகள் மற்றும் தென்னை மரங்களை அகற்றும் பணியில் ஆம்பூரைச் சேர்ந்த பொக்லைன் ஓட்டுநர் சுதாகர் என்பவர் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பொக்லைன் இயந்திரம் ஆற்றில் கவிழ்ந்தது. உடனே, அங்கிருந்தவர்கள் ஆற்றில் இறங்கி நீரில் மூழ்கிய ஓட்டுநர் சுதாகரை பத்திரமாக மீட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x