Published : 22 Nov 2021 03:08 AM
Last Updated : 22 Nov 2021 03:08 AM

குருப் பெயர்ச்சியை முன்னிட்டு திட்டை கோயிலில் பரிகார ஹோமம் :

தஞ்சாவூர்: குருப் பெயர்ச்சி விழாவையொட்டி, தஞ்சாவூர் அருகே குரு பரிகாரத் தலமான திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் சிறப்பு பரிகார ஹோமம் நேற்று நடைபெற்றது. முன்னதாக, கடந்த 13-ம் தேதி குரு பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்ந்தார். இதையடுத்து, இக்கோயிலில் கடந்த 15-ம் தேதி லட்சார்ச்சனை நடைபெற்றது.

தொடர்ந்து, நேற்று நடைபெற்ற சிறப்பு பரிகார ஹோமத்தில் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பங்கேற்று, வழிபட்டனர். பரிகார ஹோமத்தையொட்டி, குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x