Published : 22 Nov 2021 03:08 AM
Last Updated : 22 Nov 2021 03:08 AM

ரயிலில் சிக்கி 23 ஆடுகள் உயிரிழப்பு :

அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மணி(55). இவர், தனக்கு சொந்தமான 26 ஆடுகளை மேய்ச்சலுக்காக பின்னாவரம் ரயில்வே கேட் அருகே ஓட்டிச்சென்றார். அப்போது, ஆடுகள் வரிசையாக தண்டவாளத்தை கடந்துக்கொண்டிருந்தபோது திருப்பூரில் இருந்து அரக்கோணம் வழியாக வந்த ரயில் ஆடுகள் மீது மோதியது. இதில், 23 ஆடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இதுதொடர்பாக அரக்கோணம் ரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x