Published : 22 Nov 2021 03:09 AM
Last Updated : 22 Nov 2021 03:09 AM

குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஏரிக்கரை சேதம் :

வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான நெல்லூர் பேட்டை ஏரி 450 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். 102 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. தமிழக-ஆந்திர எல்லையோரம் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து கடந்த மாதம் நெல்லூர்பேட்டை ஏரி முழுமையாக நிரம்பி 1,000 கன அடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.இந்நிலையில், நெல்லூர்பேட்டை ஏரியின் கரை கனமழை காரணமாக திடீரென நேற்று அதிகாலை 5 அடி பள்ளத்துக்கு சரிவு ஏற்பட்டு சுமார் 80 அடி நீளத்துக்கு மண் சரிவு ஏற்பட்டு கரை சேதமடைந்தது.

குடியாத்தம் நகரை ஒட்டியுள்ள இந்த ஏரியின் கரையானது சிதிலமடைந்த தால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்ததும், குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினர் அமுலு, குடியாத்தம் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறையினர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஏரிக்கரையை ஆய்வு செய்தனர். பிறகு, உடனடியாக மணல் மூட்டைகளை அடுக்கி ஏரிக்கரையை சீர்செய்யும் பணி ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x