Published : 18 Nov 2021 03:09 AM
Last Updated : 18 Nov 2021 03:09 AM

அரசு பேருந்தை மீண்டும் இயக்க கோரிக்கை :

வேலூரில் இருந்து அம்மா பாளையம் இடையில் தடம் எண்-25 என்ற நகரப் பேருந்து தினசரி காலை 7 மணி, மாலை 4 என இரண்டு வேளையும் இயக்கப்பட்டு வந்தது. இந்தப் பேருந்து அம்மாபாளையம், அழகுசேனை, கண்ணமங்கலம், மேல்வல்லம், கணியம்பாடி வழியே வேலூர் சென்று வந்தது. இந்த பேருந்தை நம்பி வேலூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் வந்து சென்றனர்.

இதற்கிடையில், கரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட இந்த பேருந்து மீண்டும் இயக்கப் படாமல் உள்ளது. இதனால், வேலூரில் பள்ளி, கல்லூரிகள் படிக்கும் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வரு கின்றனர். பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் வசதிக்காக வேலூர்-அம்மாபாளையம் அரசு நகரப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x