Published : 17 Nov 2021 03:06 AM
Last Updated : 17 Nov 2021 03:06 AM

தமிழகத்தில் புதிதாக 789 பேருக்கு கரோனா தொற்று :

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 481, பெண்கள் 308 என மொத்தம் 789 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 120, கோவையில் 118 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

15 பேர் உயிரிழப்பு

நேற்று மட்டும் 913 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர். தமிழகம் முழுவதும் 9,349 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று இளைஞர்கள், முதியவர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.

இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,311ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 8,580 பேர் இறந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x