Published : 15 Nov 2021 07:12 AM
Last Updated : 15 Nov 2021 07:12 AM

புதுச்சேரியில் இருவேறு இடங்களில் 12 பவுன் நகை பறிப்பு :

புதுச்சேரி உழவர்கரை நண்பர்கள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாலதி (52). வில்லியனூர் அருகே உளவாய்க்கால் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். வில்லியனூர் - பத்துக்கண்ணு மெயின் ரோட்டில் சேர்ந்தநத்தம் பேருந்து நிறுத்தம் அருகில் வந்தபோது பின்தொடர்ந்து மற்றொரு பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர், மாலதி அணிந்திருந்த 9 பவுன் தாலிச்செயினை பறித்துக்கொண்டு சென்றார்.

இதுகுறித்து வில்லியனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் கம்பன் நகரைச் சேர்ந்தவர் ஜெயராமன் மனைவி முத்தழகு (60). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டு வாசலில் பேரக் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் முத்தழகுவிடம், முகவரி கேட்டு திடீரென முத்தழகு அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார்.

இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீ ஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x