Published : 02 Nov 2021 03:09 AM
Last Updated : 02 Nov 2021 03:09 AM

காவல் ஆணையரிடம் அதிமுக எம்.எல்.ஏக்கள் மனு :

கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், எம்.எல்.ஏவுமான அம்மன் கே.அர்ச்சுணன், கோவை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.வுமான கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் கோவை மாநகர் காவல் ஆணையரிடம் நேற்று மனு அளித்தனர். அதில், ‘‘அதிமுகவின் 50-வது ஆண்டு பொன்விழாவை கொண்டாடும் வகையில் கொடியேற்று விழா, அன்னதானம் வழங்குதல், ஏழை எளியவர்களுக்கு அதிமுகவினர் நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். கடந்த வாரம் கோவை எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, ஒண்டிப்புதூரில் அதிமுக சார்பில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை திமுகவினர் கிழித்தனர். இதை தட்டிக்கேட்ட அதிமுகவினரை திமுகவினர் தாக்கினர். இதுதொடர்பாக அதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பலனில்லை. நஞ்சுண்டாபுரத்தில் அதிமுகவினர் சுவர் விளம்பரம் செய்து வைத்திருந்ததை திமுகவை சேர்ந்தவர்கள் சுண்ணாம்பு பூசி அழிக்க முற்பட்டனர். அதை தட்டிக் கேட்ட அதிமுகவினர் மீது திமுகவினர் சுண்ணாம்பு கரைசலை ஊற்றி தாக்குதல் நடத்தியுள்ளனர். எனவே, காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x