Published : 25 Oct 2021 03:07 AM
Last Updated : 25 Oct 2021 03:07 AM

நாட்டில் புதிதாக 15,906 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு :

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரம் வருமாறு:

நாட்டில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இதன்படி நேற்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,906 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் கேரளாவில் மட்டும் 8,909 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,41,75,468 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு நேற்று ஒரே நாளில் 561 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,54,269 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் உயிரிழப்பு விகிதம் 1.33 % ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 16,479 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,35,48,605 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 98.17%ஆக உள்ளது.

மேலும் நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு தற்போது 1,72,594 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 102.10 கோடி பேருக்குகரோனா தடுப்பூசி செலுத்தப்பட் டுள்ளது. இதனிடையே நேற்று ஒரேநாளில் 13,40,158 மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள் ளன. இதன்மூலம் இதுவரை மொத்தம் 59,97,71,320 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x