Published : 22 Oct 2021 03:07 AM
Last Updated : 22 Oct 2021 03:07 AM

புறக்காவல் நிலையத்தில் நூலகம் திறப்பு :

வள்ளியூரில் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் திறந்து வைத்தார்.

வள்ளியூர் காவல் நிலையம் சார்பில் புதிய பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்தையொட்டி பொதுமக்கள் ஒத்துழைப்புடன் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது முயற்சியில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் புத்தக உண்டியல் மூலம் புத்தகங்களை நன்கொடையாகப் பெற்று இந்த நூலகத் தில் வைத்துள்ளனர். திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் நூலகத்தை திறந்து வைத்தார். வள்ளியூர் ஏ.எஸ்.பி சமயசிங்மீனா குத்துவிளக்கு ஏற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x