Published : 19 Oct 2021 03:07 AM
Last Updated : 19 Oct 2021 03:07 AM

தமிழகத்தில் புதிதாக 1,192 பேருக்கு கரோனா தொற்று :

தமிழகத்தில் நேற்று ஆண்கள்711, பெண்கள் 481 என மொத்தம் 1,192 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

அதிகபட்சமாக சென்னையில் 150, கோவையில் 130 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 14,570 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று இளைஞர்கள், முதியவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,912ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 8,527 பேர் இறந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x