Published : 19 Oct 2021 03:07 AM
Last Updated : 19 Oct 2021 03:07 AM

கடந்த 24 மணி நேரத்தில் 13,596 பேருக்கு கரோனா தொற்று :

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 13,596 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:

நாட்டில் 230 நாட்களுக்குப் பிறகு கடந்த 24 மணி நேரத்தில் மிகக் குறைவாக 13,596 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 166 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கேரளாவில் மட்டும் 74 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கடுத்து மகாராஷ்டிராவில் 29 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 52,290 ஆக அதிகரித்துள்ளது.

எனினும், கடந்த 24 மணி நேரத்தில் 19,582 பேர் குணமடைந் துள்ளனர். அவர்களையும் சேர்த்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 34 லட்சத்து 39,331 ஆக அதிகரித்துள்ளது. இது மொத்தமாக பாதிக்கப்பட்டோரில் 98.12 சதவீதமாகும். கடந்த 2020-ம்ஆண்டு தொற்று தொடங்கியதில் இருந்து இது மிக அதிகபட்சமாகும்.

தற்போது நாடு முழுவதும் ஒரு லட்சத்து 89,694 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவும் 221 நாட்களில் மிக குறைந்த எண்ணிக்கையாகும். கடந்த 24 மணி நேரத்தில் 9 லட்சத்து 89,493 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களையும் சேர்த்து இதுவரை 59.19 கோடி பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x