Published : 17 Oct 2021 03:07 AM
Last Updated : 17 Oct 2021 03:07 AM

உத்தவ் தாக்கரே மீது தேவேந்திர பட்னாவீஸ் குற்றச்சாட்டு :

மகாராஷ்டிராவில் நேற்று முன்தினம் நடைபெற்ற தசரா விழாவில் முதல்வர் உத்தவ் தாக்கரேபேசும்போது, “மகாராஷ்டிராவில் மட்டும்தான் போதைப்பொருள் பிடிபட்டுள்ளதா? கடந்தமாதம் குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் இருந்துபல கோடி மதிப்பிலான 3000 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டன” என்றார்.

இதுகுறித்து, பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவீஸ் நேற்று கூறும்போது, “முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் நான் ஒன்று கேட்க விரும்புகிறேன். நீங்கள் யார் பக்கம் நிற்கிறீர்கள்? போதைப் பொருட்களை பயன்படுத்துபவர்கள் பக்கமா? போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் பக்கமாஅல்லது அதை எதிர்த்துப் போராடி அழிக்க நினைப்பவர்கள் பக்கமா? என்று அவர் சொல்லவேண்டும்” என்றார்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x