Published : 16 Oct 2021 06:11 AM
Last Updated : 16 Oct 2021 06:11 AM

தேர்தல் வியூகம் வகுப்பதில் : தேமுதிக சறுக்கல்: : மாவட்ட செயலர் குற்றச்சாட்டு :

தேமுதிகவின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்தவர் கிருஷ்ணகோபால். 2 முறை மணப்பாறை தொகுதியில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றவர்.இந்நிலையில் நேற்று அவர் சென்னையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இதுகுறித்து கிருஷ்ணகோபால் கூறியதாவது: விஜயகாந்த் மீதான ஈர்ப்பால், அவரதுகட்சியில் தீவிரமாக பணியாற்றி வந்தேன். தற்போது அக்கட்சியின் போக்கு ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. தேர்தல் வியூகம் வகுப்பதிலும் சறுக்கலைச் சந்தித்து வருகின்றனர். அண்மையில் நடைபெற்ற 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்டச் செயலாளர்களைக்கூட அழைத்து ஆலோசனை நடத்தவில்லை. எனவே எனது ஆதரவாளர்களின் எதிர்காலம் கருதி இக்கட்சியில் இருந்து வெளியேறுவது என முடிவு செய்தேன்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக இருப்பதால் அவரது தலைமையை ஏற்று செயல்படுவது என முடிவு செய்தேன். 12 வயதிலேயே திமுக கொடி பிடித்து வளர்ந்த நான், திருச்சி சட்டக் கல்லூரியில் படித்தபோது திமுக மாணவர் அமைப்பு தலைவராகவும் இருந்தேன். எனவே, தாய் கட்சிக்கு திரும்பியதில் மிகுந்த மகிழ்ச்சி என்றார். திமுகவில் இணைந்த கிருஷ்ணகோபால் திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x