Published : 14 Oct 2021 05:55 AM
Last Updated : 14 Oct 2021 05:55 AM

கோவை மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் : 29,525 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு :

கோவை: மத்திய அரசின் சார்பில், நாடு முழுவதும் ஊரகப் பகுதிகளில் உள்ள, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்காக கடந்த 2019-ம் ஆண்டு, ஜல்ஜீவன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள ஒரு தனி நபருக்கு, நாளொன்றுக்கு 50 லிட்டர் வரை குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்தினர் கூறும்போது, ‘‘கோவை மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், வரும் 2024-ம் ஆண்டுக்குள் மொத்தம் 2 லட்சத்து 6,076 எண்ணிக்கையிலான குடிநீர் இணைப்புகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி நடப்பு ஆண்டுக்கு 50,953 வீடுகளுக்கு இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் தற்போது வரை 29,525 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு சிறுவாணி, பில்லூர் அணை தண்ணீர் மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள போர்வெல்கள் பயன்படுத்தப்படுகின்றன. நடப்பாண்டு இறுதிக்குள் மீதமுள்ள குடிநீர் இணைப்புப் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது,’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x