Published : 14 Oct 2021 05:56 AM
Last Updated : 14 Oct 2021 05:56 AM

சென்னையில் 2 மண்டலங்களில் : நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் :

பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, நகர்ப்புறத்தில் வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் அரசுக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து, தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான வழிகாட்டுதல்களுடன் அரசாணையும் வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து சென்னையில் மண்டலம் 4 - தண்டையார்ப்பேட்டை, மண்டலம் 6 - திருவிகநகர் ஆகிய பகுதிகளிலும் நகர்ப்புறவேலைய்ப்புத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x