Published : 14 Oct 2021 05:56 AM
Last Updated : 14 Oct 2021 05:56 AM

புதுச்சேரி தேர்தல் ஆணையம் எதேச்சதிகார போக்கை கைவிட வேண்டும் : முன்னாள் எம்பி ராமதாஸ் வலியுறுத்தல்

புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் தனது எதேச்சதிகார போக்கை கைவிட முன்னாள் எம்பி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போவது துரதிர்ஷ்டவசமானது.

கடந்த 10 ஆண்டுகளாக மக்களின் விருப்பத்தை மதிக்காமல் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்கான காரணத்தை கண்டுபிடித்து தொடர்ந்து தேர்தலை நிறுத்தி வைத்துள்ளோம் என்பது மனச்சுமையாக உள்ளது.

அரசியல்கட்சிகளும், மாநில தேர்தல் ஆணையமும் ஒருங் கிணைந்து வியூகம் வகுத்து தேர்தலை நடத்துவது அவசியம்.

மாநில தேர்தல் ஆணையம் தன்னாட்சி நிறுவனம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் அதன் நடவடிக்கைகள் விமர்சனத்துக்கு அப்பாற்றபட்டதாகவும், குறைகள், குளறுபடிகள் இல்லாததாகவும் இருக்க வேண்டும்.

தனது விதிகளை செயல் படுத்தும்போது அரசியல், சமூக உண்மை நிலையோடு ஒத்துப்போகச் செய்ய வேண்டும்.

எதேச்சதிகார போக்கை மாநில தேர்தல் ஆணையம் கைவிட வேண்டும்.

அரசியல் கட்சிகளும் தங்கள் அடிமட்ட தொண்டர்களுக்கு அதிகாரத்தை வழங்க முன்வர வேண்டும்.

கீழ்மட்டத்தில் எதிர்கால தலைவர்களை உரு வாக்க உள்ளாட்சித் தேர்தல் வாய்ப்பாக அமையும். புதிய தொகுதி மறுசீரமைப்பு குழுவை நியமிக்க வேண்டும்.

இந்த குழு நன்கு குறைகளை ஆராய்ந்து, வார்டுகளை சீரமைக்க வேண்டும்.

விதிகளின்படி பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், பட்டியல் இனத்தவர், பெண்களுக்கு இடஒதுக்கீடு அளித்து தேர்தலை நடத்த வேண்டும்.

உத்தேசமாக மதிப்பிடப் பட்டுள்ள மக்கள் தொகை அடிப் படையிலும் இந்தப் பணிகளை செய்து முடிக்கலாம்.

இந்தப் பணிகளை 45 நாட்களில் முடித்து அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையம் முன்பு சமர்ப்பித்து, ஒப்புதல் பெற்று ஜனவரியில் தேர்தல் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

விதிகளை செயல் படுத்தும்போது அரசியல், சமூக உண்மை நிலையோடு ஒத்துப்போகச் செய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x