Published : 13 Oct 2021 05:48 AM
Last Updated : 13 Oct 2021 05:48 AM
நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிகக்கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,
‘‘வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (அக்.13) நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் மிகக் கனமழையும், ஈரோடு, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும் பெய்யும். பிறவட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் லேசான மழையும் பெய்யும்.
சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் லேசான மழை பெய்யும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT