Published : 13 Oct 2021 05:51 AM
Last Updated : 13 Oct 2021 05:51 AM

பாலிடெக்னிக் அரியர் தேர்வு எழுத அக்.21-க்குள் கட்டணம் செலுத்தலாம் :

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஏ.ராஜேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை தொழில் நுட்ப கல்வி இயக்கக சுற்றறிக்கையின்படி 1984-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று டிப்ளமோ நிறைவு செய்யாமல் அரியர் வைத்துள்ள அனைத்து முன்னாள் மாணவர்களுக்கும் சிறப்பு கருணை அடிப்படையில் வாரிய தேர்வு அக்.2021-ல் எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் அரியர் பாடங்களுக்கான தேர்வுக் கட்டணத்தை அக்.21-ம் தேதிக்குள் அபராதம் இல்லாமல் செலுத்தலாம். அதன் பின்னர்அக்.28-ம் தேதி வரை ரூ.150 அபராதத்துடன் செலுத்த முடியும்.

அரியர் வைத்துள்ள முன்னாள் மாணவர்கள் தங்களது முந்தைய தேர்வு எழுதிய அனைத்து மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பம் பூர்த்தி செய்து, தேர்வு கட்டணம் செலுத்தி, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x