Published : 13 Oct 2021 05:51 AM
Last Updated : 13 Oct 2021 05:51 AM

வஉசி கல்லூரியில் பயின்றோர் கழக கருத்தரங்கம் :

தூத்துக்குடி: தூத்துக்குடி வஉசி கல்லூரியில் பொருளாதார துறை பயின்றோர் கழக இணைய வழி கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சொ.வீரபாகு தலைமை வகித்தார். துறைத்தலைவர் வி.வள்ளி அம்மாள் வரவேற்றார். இக்கல்லூரி பொருளாதார துறையில் பயின்ற முன்னாள் மாணவரான சாயர்புரம் போப் கல்லூரி பொருளாதார துறை உதவி பேராசிரியர் எம்.தினகரன் 'கல்லூரியின் வளர்ச்சியில் முன்னாள் மாணவர்களின் பங்கு' என்ற தலைப்பில் பேசினார்.

மேலும் இக்கருத்தரங்கில் முன்னாள் துறைத் தலைவர் காந்திமதி நாதன் துறையில் பயின்ற தலைசிறந்த ஆளுமைகள் மற்றும் அவர்களின் சாதனைகள் பற்றி விளக்கினார் . துறை உதவி பேராசிரியர் நீலாதேவி நன்றி கூறினார். பேராசிரியர் பச்சிராஜன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர் .

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x