Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM
கோவை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயல் தலைவர் மயூரா எஸ்.ஜெயக்குமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் எம் தாமோரை சந்தித்து புகார் மனு அளித்தனர். அந்த மனுவில்,‘‘நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நிகழ்ச்சி ஒன்றில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குறித்தும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்தும், இழிவாகவும், தரக்குறைவாகவும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் பேசியது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது தொடர்பாக சீமான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT