Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM

பள்ளி மாணவர்களிடம் மரக்கன்று நடும் ஆர்வத்தை ஏற்படுத்த நீதிபதி வேண்டுகோள் :

மதுரையில் நாடார் உறவின்முறை பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்ட உயர் நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி.

மதுரை: மாணவர்கள் மத்தியில் மரக்கன்று நடும் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி பேசினார்.

மதுரை யா.ஒத்தக்கடை இயற்கை பாதுகாப்பு இயக்கத்தின் 50-வது வார மரம் நடும் விழா, நாடார் உறவின்முறை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் உயர் நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி, நாட்டுப்புற பாடகர்கள் செந்தில்கணேஷ், ராஜலட்சுமி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். நீதிபதி பேசும்போது, மரக்கன்றுகள் நடுவது சிறப்பானது. மாணவர்களிடம் மரம் நடும் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

பின்னர், இயற்கை பாதுகாப்பு இயக்க உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. ஒத்தக்கடை ஊராட்சித் தலைவர் முருகேஸ்வரி சரவணன், திருமோகூர் ஊராட்சித் தலைவர் ஏ.பி.ஆர்.அண்ணாமலை, கொடிக்குளம் ஊராட்சித் தலைவர் எஸ்.திருப்பதி மற்றும் இயற்கை ஆர்வலர்கள் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x