Published : 12 Oct 2021 03:15 AM
Last Updated : 12 Oct 2021 03:15 AM
திருப்பத்தூர்: ஆம்பூர், ஆலங்காயம், நாட்றாம்பள்ளி உள்ளிட்ட வாக்கு எண்ணும் பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை தொடர்ந்து வாக்கு எண்ணும் பணிகள் 6 இடங்களில் இன்று நடைபெற உள்ளது. எனவே, ஆம்பூர் நகராட்சி, நாட்றாம்பள்ளி, ஆலங்காயம், உதயேந்திரம் ஆகிய பேரூராட்சிகள், 6 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகள் இன்று (12-ம்தேதி) மூட வேண்டும். அதேநேரத்தில், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி ஆகிய 3 நகராட்சி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகள் வழக்கம்போல் செயல்படலாம்.
மதுபான கடைகள் மூட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உத்தரவை மீறி கடைகளை திறந்து மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்ததால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT