Published : 10 Oct 2021 03:17 AM
Last Updated : 10 Oct 2021 03:17 AM

ராணுவ விஞ்ஞானி டில்லிபாபுவின் ‘எந்திரத் தும்பிகள்’ நூல் மதிப்பாய்வு: இணையவழியில் இன்று நடைபெறுகிறது

ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு எழுதிய ‘எந்திரத் தும்பிகள்’ நூல் மதிப்பாய்வு விழா இன்று (அக்.10) மாலை 6 மணிக்கு இணையவழியில் நடைபெற உள்ளது.

தேசிய வடிவமைப்பு மற்றும்ஆராய்ச்சி மன்றத்தின் (என்டிஆர்எஃப்) இயக்குநரான ராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு, போர் விமானம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் குறித்த பல நூல்களை எழுதியுள்ளார்.

அந்த வகையில், ‘எந்திரத் தும்பிகள்’ என்ற தலைப்பில் ஹெலிகாப்டர் இயங்கும் விதம் மற்றும்அதன் வகைகள் தொடர்பான புத்தகத்தையும் அவர் எழுதி உள்ளார்.

பேரிடர் காலங்களில் ஹெலிகாப்டரின் பயன்பாடுகள், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தகவல்கள் குறித்து,எளிய மொழிநடையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

இதன் மதிப்பாய்வு விழா இணையவழியில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த நிகழ்வை திசையெட்டு பதிப்பகம், ஆளுமைச் சிற்பி மாத இதழ், விஜயா பதிப்பகம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

மும்பையைச் சேர்ந்த ‘தமிழ் லெமூரியா’ இதழின் ஆசிரியர் குமணராசன், எழுத்தாளர் சுசித்ரா மகேஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று, நூல் குறித்த தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

ஆளுமைச் சிற்பி இதழின் ஆசிரியர் மெ.ஞானசேகர், கவிஞர் பிரியசகி, விஜயா பதிப்பக நிர்வாகி புனிதா சிதம்பரம் உள்ளிட்டோர் இந்நிகழ்வை ஒருங்கிணைக்கின்றனர்.

இந்த விழாவை https://m.youtube.com/channel/UCYL-qYLqWjK72z4T25bSp7Q என்ற வலைதளத்தில் நேரலையாகக் காணலாம்.

எந்திரத் தும்பிகள் புத்தகம், எஸ்ஆர்எம் தமிழ்ப் பேராயம் விருதுக்கு அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x