Published : 08 Oct 2021 03:11 AM
Last Updated : 08 Oct 2021 03:11 AM
தமிழகத்தில் நேற்று புதியதாக 1,390 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில், ஆண்கள் 797, பெண்கள் 593 பேர்.
அதிகபட்சமாக சென்னையில் 173, கோயம்புத்தூரில் 145 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் 1,865, கோவையில்1,755 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 16,513 பேர் சிகிச்சையில்உள்ளனர்.
கரோனாவால் அரசு மற்றும்தனியார் மருத்துவமனைகளில் நேற்று 27 பேர் உயிரிழந்தனர்.தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் இதுவரை4 கோடியே 71 லட்சத்து 24 ஆயிரத்து 272 பேருக்கு பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 1 லட்சத்து 45 ஆயிரத்து 350 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT