Published : 08 Oct 2021 03:11 AM
Last Updated : 08 Oct 2021 03:11 AM

கர்நாடகாவில் : வீடு இடிந்து 7 பேர் உயிரிழப்பு :

கர்நாடக மாநிலத்தில் 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பெலகாவியில் நேற்று முன் தினம் இரவு விடிய விடிய பலத்த காற்றுடன் மழை பெய்தது. இரவு 10 மணியளவில் பெய்த மழையில் பாதல் அங்கல்கி என்ற கிராமத்தில் மாடி வீடு இடிந்து விழுந்தது.

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அர்ஜுன் கன்கவி (48), அவரது மனைவி, மகள்கள், உறவினர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இதில் 3 குழந்தைகள் உட்பட‌ 7 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். பாதிக்கப் பட்டோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க முதல்வர் பசவராஜ், மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சம் வழங்க பிரதமர் மோடி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x