Published : 08 Oct 2021 03:11 AM
Last Updated : 08 Oct 2021 03:11 AM

நாடு முழுவதும் 22,431 பேருக்கு கரோனா தொற்று உறுதி :

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 22,431 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக 20 ஆயிரத்துக்கும் குறைவாகவே பெருந்தொற்று பாதிப்பு பதிவாகி வந்த நிலையில், இந்த எண்ணிக்கை சற்று அதிகம் ஆகும். எனினும், 13-வது நாளாக 30 ஆயிரத்துக்கும் குறைவாக தினசரி பாதிப்பு பதிவாகி உள்ளது.

குணமடைவோரின் எண் ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 24,602 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,44,198-ஆக குறைந்துள்ளது. இது கடந்த 204 நாட்களில் இல்லாத குறைவான அளவாகும்.

நேற்று ஒரே நாளில் 318 பேர் உயிரிழந்துள்ளனர். இதனுடன் சேர்த்து, வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,49,856-ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

92.63 கோடி தடுப்பூசி

கடந்த 24 மணி நேரத்தில் 43,09,525 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 92.63 கோடியாக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 14,31,819 பேருக்கு வைரஸ் பரிசோதனை மேற் கொள்ளப் பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித் துள்ளது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x