Published : 08 Oct 2021 03:12 AM
Last Updated : 08 Oct 2021 03:12 AM

கே.பி.ஆர்.பொறியியல் தொழில்நுட்ப கல்லூரிஎல் அன்ட் டி ‘எடுடெக்’ இடையே ஒப்பந்தம் :

கே.பி.ஆர். பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் எல் அன்ட் டி ‘எடுடெக்’ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியின் தலைவர்கே.பி.ராமசாமி தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் மு.அகிலா மற்றும் எல் அன்ட் டி நிறுவனத்தின் கல்லூரி இணைப்பு வணிகப் பிரிவு தலைவர் பெபின் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கவுரவ விருந்தினர்களாக எல் அன்ட் டி நிறுவனத்தின் கட்டுமானதுறையின் தலைவர் ஆர்.கணேசன், கல்லூரிகள் இணைப்பு பிரிவு தெற்கு மண்டல மேலாளர் கணேஷ்வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, கல்லூரியின் மின்னியல் துறை பேராசிரியர் குமார் சின்னையன் வரவேற்றார். கட்டிடவியல் துறை தலைவர் அனுஷா, இயந்திரவியல் துறை தலைவர் ரமேஷ் பாபு மற்றும் அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். ரமேஷ் பாபு நன்றி கூறினார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம்ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு மற்றும்நிகழ்நேர திட்டங்களில் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x