Published : 07 Oct 2021 03:12 AM
Last Updated : 07 Oct 2021 03:12 AM

ராமாயணம் தொடரில் ராவணனாக நடித்த திரிவேதி மறைவுக்கு பிரதமர் இரங்கல் :

புதுடெல்லி: இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்தது ராமாயணம் தொடராகும். 1987 முதல் 1988-ம் ஆண்டு வரை ஒளிபரப்பான இந்த தொடரில் ராவணன் வேடத்தில் நடித்தவர் அர்விந்த் திரிவேதி. தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி அந்தகாலத்தில் பெரும் வரவேற்பை பெற்றார் திரிவேதி. மேலும் 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். பின்னர் 1991-ம் ஆண்டு பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பி.யானார்.

மும்பை காந்திவேலியில் வசித்து வந்த திரிவேதி முன்தினம் இரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். அதேபோல், பிரபல இந்தி திரைப்பட மற்றும் டிவி தொடர் நடிகர் கணேஷ்யாம் நாயக் தனது 77-வது வயதில் 3 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.இருவரின் மறைவு குறித்தும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''கடந்த சில நாட்களில், தங்கள் திறமை மூலம் மக்களின் மனதை வென்ற 2 திறமையான நடிகர்களை நாம் இழந்துள்ளோம். அர்விந்த் திரிவேதி சிறந்த நடிகர் மட்டுமல்ல, அவர் பொதுச்சேவையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் இரு நடிகர்களின் குடும்பங்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி என்று கூறியுள்ளார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x