Published : 03 Oct 2021 03:11 AM
Last Updated : 03 Oct 2021 03:11 AM

தளி பேரூராட்சிக்குட்பட்ட : ஆனைமலை இணைப்புச் சாலை பழுது :

உடுமலை: உடுமலையில் இருந்து திருமூர்த்திமலைக்கு செல்லும் சாலையில் தளி பேரூராட்சி உள்ளது. அங்கிருந்து ஆனைமலை செல்லும் இணைப்புச் சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலை பழுதடைந்து, குண்டும் குழியுமாக மாறியுள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால், இச்சாலையில் மழைநீர் தேங்கி குளம்போல உள்ளது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், குழி இருப்பது தெரியாமல் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x