Published : 03 Oct 2021 03:11 AM
Last Updated : 03 Oct 2021 03:11 AM
சென்னை அம்பத்தூரில் ஒரு அமைப்பினர் ஒன்றுசேர்ந்து ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இவர்களிடம் பொதுமக்கள் முதலீடு செய்துள்ளனர். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக அவர்கள் ஏலச்சீட்டு தொகையை முறையாக திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து 52 பேரிடம் சுமார் ரூ.3.50 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாக காசிராஜன் உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய காஞ்சிராஜன், செல்வராஜ், செல்வம், பாஸ்கரன் ஆகியோர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், தங்களிடம் சீட்டு போட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை முழுவதுமாக திருப்பித் தருவதாக உறுதி அளித்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, “பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பணத்தை பெற்றுக் கொடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி என்.கிருபாகரனை ஆணையராக நியமிக்கிறேன். அவரிடம் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் பணம் செலுத்தியதற்கான ரசீது உள்ளிட்ட ஆவணங்களை அளித்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம். இந்த ஆதாரங்களை வரும் டிசம்பர் முதல் தேதிக்குள் வழங்க வேண்டும்” எனக்கூறி காஞ்சிராஜன் உள்ளிட்டோருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT