Published : 01 Oct 2021 03:18 AM
Last Updated : 01 Oct 2021 03:18 AM

நாட்டில் புதிதாக 23,529 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று :

மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரம் வருமாறு:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 23,529 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது முந்தைய நாளை விட சுமார் 25 சதவீதம் அதிகம். இதன் மூலம் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 3 கோடியே 37 லட்சத்து 39,980 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 311 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 48,062 ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 2 லட்சத்து 77,020 ஆக உள்ளது. கடந்த 195 நாட்களில் இது மிகக் குறைந்த எண்ணிக்கை ஆகும். குண மடைந்தோர் விகிதம் 97.85 சதவீதமாக உள்ளது. கடந்த 2020 மார்ச்சுக்கு பிறகு இது மிக அதிகம் ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் 28,718 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 30 லட்சத்து 14,898 ஆக உயர்ந் துள்ளது.

தினசரி பாசிட்டிவ் விகிதம் 1.56 சதவீதமாக உள்ளது. இது கடந்த 31 நாட்களாக 3 சதவீதத்துக்கு குறைவாக உள்ளது. வாராந்திர பாசிட்டிவ் 1.74 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த 97 நாட்களாக 3 சதவீதத்துக்கு குறைவாக உள்ளது. இதுவரை 56.89 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

நாடு தழுவிய கரோனா தடுப்பூசி பணியில் 88.34 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x