Published : 28 Sep 2021 03:20 AM
Last Updated : 28 Sep 2021 03:20 AM
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முதல் முறையாக பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் பணிபுரியும் நீதிபதிகள் ஓய்வு பெற்றால் அந்த நீதிபதி ஓய்வுபெறும் நாளில் சென்னையில் தலைமை நீதிபதியுடன் ஒரே அமர்வில் வழக்குகளை விசாரிப்பதும், பின்னர் சென்னையில் பிரிவு உபச்சார விழா நடத்தப்படுவதும் வழக்கம்.
மதுரையில் உயர் நீதிமன்றக் கிளை தொடங்கி 17 ஆண்டுகளாகின்றன. இருப்பினும், இதுவரை உயர் நீதிமன்ற கிளையில் ஓய்வு பெறும் நீதிபதிகளுக்கு பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது இல்லை. முதல் முறையாக உயர் நீதிமன்றக் கிளையில் நீதிபதி டி.கிருஷ்ணவள்ளிக்கு நேற்று பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. அவருக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி சால்வை மற்றும் பூங்கொத்து கொடுத்தார்.
நீதிபதி கிருஷ்ணவள்ளி ஏற்புரையாற்றினார். நிர்வாக நீதிபதி எம்.துரைசுவாமி மற்றும் நீதிபதிகள், தலைமை அரசு வழக்கறிஞர் சண்முக சுந்தரம், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் வீரகதிரவன், பாஸ்கரன், அரசு பிளீடர் திலக்குமார் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் காணொலிக் காட்சி வழியாக பிரிவு உபச்சார விழாவில் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT