Published : 26 Sep 2021 03:25 AM
Last Updated : 26 Sep 2021 03:25 AM

உச்ச நீதிமன்றத்தில் அரசு சார்பில் வாதாட வழக்கறிஞர் நியமனம் :

சென்னை

தமிழகத்தை பொருத்தவரை காவிரியில் கர்நாடக அரசு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உரியநீரை வழங்காதது, மேகேதாட்டுவில் அணை கட்டுவது குறித்தும், முல்லை பெரியாறு உள்ளிட்ட விவகாரங்களில் கேரள அரசு உடனான விவகாரங்களிலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்து வருகிறது.

இவ்வாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்போது தமிழகம் சார்பில் வாதாட வழக்கறிஞர்கள் தற்போது நியமிக்கப்பட்டு, அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி, சங்கர் நாப்தே, உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்துக்கான கூடுதல் தலைமை வழக்கறிஞர் வி.கிருஷ்ணமூர்த்தி, மூத்த வழக்கறிஞரும் எம்பியுமான என்.ஆர்.இளங்கோ, வழக்கறிஞர் ஜி.உமாபதி, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் டி.குமணன்ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x