Published : 26 Sep 2021 03:25 AM
Last Updated : 26 Sep 2021 03:25 AM
சிவில் சர்வீஸ் தேர்வில் மனிதநேய பயிற்சி மையத்தில் படித்த 18 போ் வெற்றி பெற்றுள்ளனா்.
இதுகுறித்து மனிதநேய அறக்கட்டளையின் நிறுவன தலைவர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட குடிமைப் பணிகளுக்கான (சிவில் சர்வீஸ்) தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வானது முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என 3 நிலைகளை கொண்டது.
அதன்படி 2020-ம் ஆண்டு 796 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டது. இதையடுத்து, தகுதியான மாணவர்கள் கண்டறியப்பட்டு முதல்நிலைத் தேர்வு எழுதுவதற்கு மனிதநேய பயிற்சி மையத்தில் உண்டு உறைவிட வசதியுடன் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி இலவசமாக வழங்கப்பட்டது. கரோனா பரவல் காரணமாக, பயிற்சி வகுப்புகள் இணைய வழியில் நடத்தப்பட்டன.
இத்தோ்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நேர்காணலுக்கான பயிற்சியும் அறக்கட்டளை சார்பில் அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இறுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில், மனிதநேய பயிற்சி மையத்தில் படித்த 8 மாணவிகள் உட்பட 18 பேர் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக, கோயம்புத்தூரை சேர்ந்த வி.எஸ்.நாராயண சர்மா என்ற மாணவர் தேசிய அளவில் 33-ம் இடத்தையும், தென்காசியை சேர்ந்த சண்முகவள்ளி என்ற மாணவி108-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT