Published : 25 Sep 2021 03:32 AM
Last Updated : 25 Sep 2021 03:32 AM

கோவை மாநகராட்சி பகுதிகளில் - முதல் தவணை தடுப்பூசியை : 70% பேர் செலுத்தியுள்ளனர் :

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினசரி 200 முதல் 230 பேர் வரை உள்ளது. மாநகரில் மட்டும் 60 முதல் 80 பேர் பாதிக்கப்படுகின்றனர். தற்போது 27 இடங்களில் கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளதாக மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறும் போது, “வீடுகள், தெருக்களில் அடுத்தடுத்து கரோனா தொற்று பாதிப்பு ஏற்படுவது குறைந் துள்ளது. இதனால் ஒரு வீதியில் 3 பேர் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அந்த பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு, அடைக்கப்படுகிறது. 10 நாட்களுக்கு அதே பகுதியில் பாதிப்பு இல்லையெனில், அந்த பகுதி கட்டுப்பாட்டு பகுதி என்ற வரையறையில் இருந்து விடுவிக்கப் படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மாநகரில் இதுவரை 70 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தவிர, 10 சதவீதம் பேர் புறநகர் பகுதிகளில் இருந்து வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாக உள்ளனர்” என்றனர்.

கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்ட கூடுதல் கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விலக்கிக் கொண்டுள் ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “அண்டை மாநிலமான கேரளாவில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து கோவைக்கு தங்கி படிக்க வரும் மாணவர்கள் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவில் உள்ளது. அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருப்பதை கண்காணித்து வருகிறோம். இல்லையெனில் தனிமைப்படுத்த அறிவுறுத்தியுள்ளோம்.

தற்போது மக்கள் அதிகம் குடும்பத்துடன் வெளியில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் வணிக வளாகங்கள், கடைகளுக் கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப் பட்டுள்ளன.

இதனால் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், ஜவுளி மற்றும் நகைக்கடைகள் மீது அபராதம் விதிப்பதை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x