Published : 24 Sep 2021 03:21 AM
Last Updated : 24 Sep 2021 03:21 AM

திறந்தவெளி விளையாட்டுக்கு அனுமதி : போட்டிகள், பயிற்சிகள் நடத்தலாம்

திறந்தவெளி அரங்கில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக திறந்தவெளி அரங்குகளில் போட்டிகள் நடத்துவதற்கான அனுமதிவழங்கப்படவில்லை. இந்நிலையில், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர், தமிழக வருவாய்த் துறை செயலருக்கு அனுப்பிய கடிதத்தில், தமிழகத்தில் விளையாட்டு போட்டிகள் நடத்தவும், மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கான பயிற்சிகளை, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஆணைத்தின் கீழ்இல்லாத விளையாட்டு அரங்கங் களில் மேற்கொள்வதற்காக அனுமதி யளிக்கும்படியும் கோரியிருந்தார்.

இந்நிலையில், பேரிடர் மேலாண் இயக்குநரின் பரிந்துரையைப் பெற்று, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலருக்கு வருவாய்த் துறை செயலர் குமார் ஜெயந்த் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘‘திறந்தவெளியில் விளையாட்டுப் போட்டிகளை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு சொந்தமான அல்லதுஇதர அரங்கத்தில் பார்வையாளர்கள்இல்லாமல் அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடத்தலாம். மேலும்,விளையாட்டரங்கங்கள், இதர விளையாட்டுக்கான வசதிகளை விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காகவும் பயன்படுத்தலாம்’’ என்று தெரிவித்து்ள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x