Published : 24 Sep 2021 03:21 AM
Last Updated : 24 Sep 2021 03:21 AM
தமிழகத்தில் காவல் துறை உயர் அதிகாரிகள் 10 பேர் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக உள்துறை செயலர் எஸ்.கே. பிரபாகர் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
சென்னை ஆயுதப்படை ஏடிஜிபியாக இருந்த ஜெயந்த் முரளி, சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக பணியிட மாற்றம்செய்யப்பட்டுள்ளார். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக இருந்த அபய்குமார் சிங், சென்னை ஆயுதப்படை ஏடிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விடுப்பில் இருந்து திரும்பிய ஐ.ஜி. மகேந்தர் குமார் ரத்தோட்,தமிழ்நாடு சீருடைப் பணியாளர்தேர்வாணைய உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலராக இருந்த கார்த்திகேயன், திருச்சி மாநகரகாவல் ஆணையராகவும், திருச்சி காவல் ஆணையராக இருந்த அருண், சென்னை காவல் துறை பயிற்சிக் கல்லூரி ஐ.ஜி.யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அயல் பணியில் இருந்துதிரும்பிய டிஐஜி சரவணசுந்தர், திருச்சி சரக டிஐஜியாகவும், திருச்சி சரக டிஐஜியாக இருந்த ராதிகா, சென்னை டிஐஜியாக வும் (பொது நிர்வாகம்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவ விடுப்பில் இருந்தஎஸ்.பி. நிஷா, விடுப்பு முடிந்துதிரும்பிய நிலையில், சென்னைகாவல் துறை கணினிமயமாக்கல் பிரிவு எஸ்.பி.யாக நியமிக்கப்பட் டுள்ளார்.
சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்பி.யாக இருந்த மாடசாமி,சேலம் (வடக்கு) சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகவும், சேலம்குற்றம், போக்குவரத்து துணைஆணையராக இருந்த வேதரத்தினம், சென்னை டிஜிபி அலுவலகபணியமைப்பு பிரிவு உதவி ஐ.ஜி.யாகவும் நியமிக்கப்பட் டுள்ளனர்.
இவ்வாறு உத்தரவில் கூறப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT