Published : 24 Sep 2021 03:22 AM
Last Updated : 24 Sep 2021 03:22 AM

தமிழகத்தில் புதிதாக 1,745 பேருக்கு கரோனா :

தமிழகத்தில் நேற்று 953 ஆண்கள், 792 பெண்கள் என 1,745பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில்அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 226 பேர், சென்னையில் 222 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்புஎண்ணிக்கை 26 லட்சத்து 52 ஆயிரத்து 115 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை தமிழகம் முழுவதும் 25 லட்சத்து 99 ஆயிரத்து 567 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று1,624 பேர் குணமடைந்து வீடுதிரும்பினர். 17,121 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று 27 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 35,427ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x