Published : 23 Sep 2021 03:11 AM
Last Updated : 23 Sep 2021 03:11 AM

மத்திய அமைச்சருக்கு டபிள்யூஎச்ஓ இயக்குநர் நன்றி :

புதுடெல்லி

இந்தியாவில் கரோனா பரவல் குறைந்திருப்பதுடன் தடுப்பூசி உற்பத்தியும் 2 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், வரும் அக்டோபர் மாதம் முதல் சர்வதேச ‘கோவாக்ஸ்’ அமைப்புக்கு மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படும் என மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியா கடந்த திங்கள்கிழமை அறிவித்தார். குறிப்பாக தேவை போக கூடுதலாக உள்ள தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து டபிள்யூஎச்ஓ இயக்குநர் ஜெனரல் டெட்ராஸ் ஆதானோம் கேப்ரியேசஸ் நேற்றுட்விட்டரில், “கோவாக்ஸ் அமைப்புக்கு வரும் அக்டோபர் முதல் கரோனா தடுப்பூசி மீண்டும் ஏற்றுமதி செய்யப்படும் என்ற இந்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியாவின் அறிவிப்புக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x