Published : 23 Sep 2021 03:11 AM
Last Updated : 23 Sep 2021 03:11 AM

தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் - நில ஆவணங்கள் மாயமானது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு :

சென்னை, ஜமீன் பல்லாவரத்தில் குரோம்லெதர் கம்பெனிக்கு சொந்தமான 1.79 ஏக்கர் நிலத்தை குவெண்டிதாசன் என்ற பெயருக்கு பட்டா மாற்றம் செய்து கடந்த 2019-ம் ஆண்டு தாம்பரம் வருவாய் கோட்டாட்சியராக பதவி வகித்த ராஜகுமார் என்பவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து குரோம்லெதர் கம்பெனி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, வருவாய் கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு, சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் முன்னாள் மற்றும் இந்நாள் வருவாய் கோட்டாட்சியர்களை ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x