Published : 23 Sep 2021 03:13 AM
Last Updated : 23 Sep 2021 03:13 AM
நாகப்பட்டினம்: நாகை ஆட்சியர் அலுவலகத்தில், தலைஞாயிறு, திருப்பூண்டி, தேவூர், வடுகச்சேரி, திருமருகல் ஆகிய 5 வட்டாரங்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ், வீடு தேடி சென்று பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க 5 வாகனங்களை ஆட்சியர் அருண் தம்புராஜ் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், ஆட்சியர் கூறியது: நாகை மாவட்டத்தில் உள்ள 17,263 ரத்த கொதிப்பு நோயாளிகள், 8,291 நீரிழிவு நோயாளிகள், இரு நோய்களும் உள்ள 5,467 நோயாளிகள் என மொத்தம் 31,021 நோயாளிகள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறுவர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT