Published : 22 Sep 2021 03:04 AM
Last Updated : 22 Sep 2021 03:04 AM

நியாயவிலைக் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் - மக்களை அலைக்கழிக்க கூடாது : ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை

நியாயவிலைக் கடைக்கு பொருட்கள் வரும் குடும்ப அட்டைதாரர்களை அலைக்கழித்தால், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப்பொருள் ஆணையர் ஆர்.ஆனந்தகுமார் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நியாயவிலைக் கடைகளுக்கு செல்ல இயலாத முதியோர், மாற்றுத் திறனாளிகள், இதர நபர்கள்இதற்கென உரிய படிவத்தில் அவரால் அத்தாட்சி செய்யப்பட்ட நபரின் விவரத்தை பதிந்து, நியாயவிலைக் கடையில் கொடுத்து அந்த நபரின் வாயிலாக உணவுப்பொருட்கள் வழங்க உத்தரவிடப் பட்டுள்ளது.

இதை உரிய முறையில் செயல்படுத்த வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் மீண்டும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதன்படி அநேக முதியோர், மாற்றுத் திறனாளிகள் பயன்பெற்று வருகின்றனர். இதற்கெனவிற்பனை இயந்திரத்தில் கைரேகை சரிபார்ப்பு இல்லாமல் குடும்ப அட்டையை மட்டும் ஸ்கேன்செய்து விற்பனை பரிவர்த்தனையை பதிவேட்டில் அங்கீகரிக்கப்பட்ட நபரின் கையொப்பம் பெற்று பொருட்களை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், 5 வயதுக்கு மேற்பட்டகுடும்ப உறுப்பினர் யாரும் வந்துகைரேகையை பதிந்து பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். நியாயவிலைக் கடைகளுக்கு வரமுடியாதவர்களால் அத்தாட்சி அளிக்கப்பட்ட நபர்கள் வழியாகபொருட்களை பெறலாம் என்றுஉணவுத்துறை அமைச்சரும் சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தற்போது இதுதொடர்பாக புகார்கள் பெறப்படுவதால், அங்கீகாரப்படிவம் அளிக்கப்பட்டதுமே, உணவுப் பொருட் களை விநியோகிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதை மீறிஇனி யாரேனும் எந்தக் குடும்பத் தாரையும் அலைக்கழித்தால் அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x