Published : 21 Sep 2021 03:18 AM
Last Updated : 21 Sep 2021 03:18 AM
கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சதானந்த கவுடா (68) பெண் ஒருவருடன் வீடியோ அழைப்பில் ஆபாசமாக பேசுவது போன்ற வீடியோ நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது.
இந்நிலையில் ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய கர்நாடக முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதைப் போல, சதானந்த கவுடா மீதும் பாஜக மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தினர்.
இந்நிலையில் சதானந்த கவுடா நேற்று கூறும்போது, “அரசியல் ரீதியாக எனது வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல், சிலர் போலியாக இந்த வீடியோவை தயாரித்துள்ளனர். அவர்கள் மீது பெங்களூரு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் தடயவியல் துறையிலும் புகார் அளித்துள்ளேன். என் மீது களங்கம் விளைவிக்க முயற்சிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போராடுவேன். இதில் சம்பந்தப்பட்டவர்களை விரைவில் கைது செய்யும்படி போலீஸாரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT